காங்கிரஸ் கட்சி மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி:-
காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியுற்றதற்கு காரணம் தலைவர்களிடையே காணப்படும் 5 நட்சத்திர கலாச்சாரம் தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
குலாம் நபி ஆசாத் அளித்த பெட்டியில்:-
#WATCH | I'm giving a clean chit to Gandhis as they can't do much right now due to #COVID. There's no change in our demands. They've agreed to most of our demands. Our leadership should hold elections if they want to become a national alternative & revive the party: G N Azad pic.twitter.com/FOyn8DrIfC
— ANI (@ANI) November 22, 2020
கொரோனா பரவல் காரணமாக சோனியா மற்றும் ராகுல் காந்திகளால் தற்போது அதிகம் ஏதும் செய்ய முடியாததால் நான் தலைமையை குறை கூற விரும்பவில்லை. மேலும், எங்கள் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டது. ஏனெனில், காங்கிரஸ் தலைவர்கள் 5 நட்சத்திர கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்கள்.
அவர்கள் அந்த 5 நட்சத்திர கலாச்சாரத்தை கைவிடும் வரை காங்கிரஸால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று குலாம் நபி ஆசாத் தெறிவித்துள்ளார்.