கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை படங்களை படிக்க வைப்பதில் மட்டும் இல்லாமல் , வேறு சில கற்றல் வகுப்புகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.
அப்படி புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் பகுதியைச் சேர்ந்த நிஷாந்தினி என்பவரை அவரது பெற்றோர் தவில் இசையை கற்றுக்கொள்ழும் பயிற்சி வகுப்பில் சேர்த்துள்ளனர். இப்போது அவர் தவில் இசையை பயின்று கோவில் நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கும் தவில் வாசிக்க சென்று வருகிறார். பல்வேறு நுட்பங்களை புகுத்தி மிகவும் தத்ரூபமாக அவர் தவில் வாசித்தது அனைவைரையும் கவர்ந்தது. சிறுவயதிலேயே நம் பாரம்பரிய கலையான தவில் வாத்தியத்தை வாசிப்பதை ஆர்வமுடன் கற்றுக் கொண்ட நிஷாந்தினிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.