திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை ஸ்வாதி, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறாராம்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை ஸ்வாதி, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறாராம்.
ஹைராபாத்:-
தமிழ் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வாதி. தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்" பெரும் பரபலமானது. இப்படம் ஸ்வாதியை பிஸியாகியது.
இதனை தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். மேலும், தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். இந்நிலையில் 2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். தற்போது ஹைராபாத்துக்கு திரும்பி பெற்றோருடன் வசித்து வரும் ஸ்வாதி மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறாராம். ஸ்வாதிக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.