கொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக 3-வது கட்டமாக ரூ.900 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.
கொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக 3-வது கட்டமாக ரூ.900 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.
டெல்லி:-
கொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக 3-வது கட்டமாக ரூ.900 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. கோவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் கொரோனா மருந்து ஆராய்ச்சிக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க 7 நிறுவனங்களுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இதில் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக், புனேயில் உலா சீரம் இன்ஸ்டிடியூட், அஹமதாபாத்தை சேர்ந்த சைடல் கடிலா உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பு மருந்துக்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மேலும், சமீபத்தில் பிரதமர் மோடி இந்த 3 நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.