மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாயக்கர் குப்பத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையத்தை சீர்காழி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2020-21 ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி திறந்துவைத்தார் முன்னதாக நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் சிங்காரவேலர் மார்பளவு சிலையை திறந்து வைத்தார், உடன் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ கே சி சந்திரசேகரன், ஊராட்சி ஆணையர் கஜேந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் கழக செயலாளர் போகர் சி. ரவி, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊர் நாட்டார் பஞ்சாயத்தார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.