தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:-
தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பள்ளிகளில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன.
மேலும், செய்முறை வகுப்புகளும், வாரத்தில் இரண்டு நாக்ள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 03-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு அட்டவணை:-
மே 3-ந்தேதி - மொழிப்பாடம்
மே 5-ந்தேதி- ஆங்கிலம்
மே 7-ந்தேதி - கணினி அறிவியல்
மே 11-ந்தேதி - இயற்பியல், பொருளாதாரம்
மே 17-ந்தேதி- கணிதம், விலங்கியல்
மே 19-ந்தேதி- உயிரியல், வரலாறு
மே 21-ந்தேதி- வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள்
காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.
காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும்.
காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மொத்தம் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.