சென்னை:-
ஐபிஎல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 16.25 கோடிக்கு எடுத்துள்ளது. சிவம் துபே-வை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 4.4 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்திற்காக மொத்தம் 1,114 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்திருந்தனர். எனினும், உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்த பின்னர் அந்த ஏல பட்டியலில் வீரர்கள் எண்ணிக்கை 292 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.