புதுவை ஆட்சியர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுவை ஆட்சியர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:-
சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் அசம்பாவிதங்களை தடுக்க 7ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், ஆயுதங்கள் கம்புகள் மற்றும் பேனர்கள் வைத்திருத்தல், கோஷங்களை எழுப்புதல், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜாங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கின் விசாரணையின் போது, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது குறித்து உரிய விளக்கம் தரவில்லையென்றால் தடை உத்தரவை ரத்து செய்ய நேரிடும் என்று அரசுக்கு நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தரப்பில் 144 தடை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:-
இதுதொடர்பாக ஆட்சியர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
புதுச்சேரியில் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சென்றும் வாக்களிக்க தடையில்லை. மேலும், புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு வாக்குப்பதிவு மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்காது. வாக்குபதிவின் போது சட்டவிரோதமாக ஆட்கள் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.