நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோளை,
'பி.எஸ்.எல்.வி
- சி 44' ராக்கெட்
உதவியுடன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான,
இஸ்ரோ
இன்று, விண்ணில் செலுத்துகிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில்
உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில்
இருந்து, பி.எஸ்.எல்.வி,
ஜி.எஸ்.எல்.வி.,
ரக
ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைகோள்களை
விண்ணில் செலுத்தி வருகிறது இஸ்ரோ. தற்போது,
புவி
அமைப்பு மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்க, 'மைக்ரோசாட்
- ஆர்' என்ற,
இமேஜிங்
செயற்கைகோளை, இஸ்ரோ தயாரித்துள்ளது.
இதனுடன்,
மாணவர்கள்
உருவாக்கியுள்ள, 'கலாம்சாட்'
என்ற,
குறைந்த
எடை உடைய செயற்கைகோளையும் சுமந்தபடி, 'பி.எஸ்.எல்.வி.,
- சி 44' ராக்கெட்,
ஸ்ரீஹரிகோட்டாவில்
உள்ள ஏவுதளத்தில் இருந்து, இன்று
இரவு, 11:40 மணிக்கு
விண்ணில் பாய்கிறது. இதற்கான,
கவுன்ட்
- டவுன், நேற்றிரவு
துவங்கியது.